கோவை டாடாபாத்தில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்

கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.


கோவை: கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.



20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.



இன்று (ஜூலை 9) நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தமிழக அரசையும் மின்சார வாரியத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.



தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாநகரத் தலைவர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மின்சார வாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் கடுமையான வேலைப்பளுவுடனும் மன உளைச்சலுடனும் கீழ் மட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் தொடர் விபத்துகளும் மரணங்களும் ஏற்பட்டு வருகின்றன," என்றார்.

மேலும் அவர், "பலமுறை எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியும் இந்த அரசு செவி மடுக்காத காரணத்தால் தான் தமிழகம் முழுவதும் அலுவலகத்திற்குள்ளேயே காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த போராட்டத்திற்கு அரசு தீர்வு காணவில்லை என்றால் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கி செல்லும்," என்று எச்சரித்தார்.

மின்சார வாரிய தலைவர், அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையாளருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், கோரிக்கைகளுக்கு ஏற்புடைய பதில் கிடைக்கவில்லை என்றும் மதுசூதனன் தெரிவித்தார். இதனால் சமரச முறிவு ஏற்பட்டு போராட்டக் களத்தில் இறங்க நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...