பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம்: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து, சுற்றுலா பயணிகள் நேரம் மிச்சமாகிறது. சுற்றுலா பயணிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார், கவி அருவி, ஆழியார் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும், வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் தென்படுவதும் உண்டு.

குளுமையான சூழலை ரசிக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகளின் நேரம் மிச்சமாவதோடு, போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைந்துள்ளது. இந்த புதிய முன்னெடுப்புக்கு சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...