பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம்: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து, சுற்றுலா பயணிகள் நேரம் மிச்சமாகிறது. சுற்றுலா பயணிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார், கவி அருவி, ஆழியார் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும், வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் தென்படுவதும் உண்டு.

குளுமையான சூழலை ரசிக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகளின் நேரம் மிச்சமாவதோடு, போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைந்துள்ளது. இந்த புதிய முன்னெடுப்புக்கு சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...