பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம்: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து, சுற்றுலா பயணிகள் நேரம் மிச்சமாகிறது. சுற்றுலா பயணிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார், கவி அருவி, ஆழியார் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும், வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் தென்படுவதும் உண்டு.

குளுமையான சூழலை ரசிக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகளின் நேரம் மிச்சமாவதோடு, போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைந்துள்ளது. இந்த புதிய முன்னெடுப்புக்கு சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...