வாயில் காயங்களுடன் குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டியானைக்கு ஆனைமலை சரணாலயத்தில் சிகிச்சை


கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவந்த மூன்று வயதுடைய குட்டியானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில், 70 சதவிகிதம் குணமடைந்த குட்டியானை கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று பில்லூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் காரமடை அருகேயுள்ள ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அந்த குட்டி யானை மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. மேலும், ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் இருந்த பலாமரத்தில் பழம் உண்பதற்காக அந்த யானை முயற்சித்துள்ளது. இதனால் அச்சமடைந்த அங்கிருந்த ஒரு குடியிருப்பு வாசிகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் புகார் அளித்தநிலையில், கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டியானையை மையக்க ஊசி செலுத்தி கடந்த ஞாயிறன்று பிடித்தனர்.

தொடர்ந்து, டாப்சிலிப் ஆனைமலை புலிகள் சரணாலயம் வரகலியார் முகாமிற்கு அந்த யானை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட வனத்துறை அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் கூறுகையில், தற்போது கோவை வனப்பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள யானை மிகவும் குட்டி. வனத்துறையினரால் சிகிச்சைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதை கும்கி யானையாக பயிற்சியளிக்கலாமா அல்லது வனப்பகுதியிலேயே விடலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...