கோவை மாநகரில் மழை: தண்ணீர் தேக்கமின்றி இயல்பு வாழ்க்கை - உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரம்

கோவையில் மிதமான மழை பெய்தும், நகராட்சி ஆணையரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தண்ணீர் தேக்கமின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.


கோவை: கோவை மாநகரில் உக்கடம், சுங்கம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம், டவுன் ஹால், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பொழிந்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில், விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணம் தடையின்றி நடைபெற்று வருகிறது. வழக்கமாக மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் மழை நீர் தேங்கும் நிலை இருந்தபோதிலும், மாநகராட்சி ஆணையர் M சிவகுருபிரபாகரன் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இம்முறை அத்தகைய நிலை ஏற்படவில்லை.



மழை நீர் வடிகால் பணிகள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மழை நீர் தேங்காமல் வடிந்தோடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மறுபுறம், கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து சென்றனர். இதனால் தின்பண்ட கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அங்கங்கே வீசப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் கிளம்பர் தனியாங்கி எனப்படும் நவீன கழிவு அகற்றும் வாகனம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் உக்கடம் பெரியகுளம் பகுதி விரைவில் தூய்மையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...