கோவையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்த கவுன்சிலர்

கோவை மாநகராட்சியின் 86வது வார்டில், கவுன்சிலர் அகமது கபீர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 86வது வார்டு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கவுன்சிலர் அகமது கபீர் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உக்கடம் குழந்தை கவுண்டர் வீதி பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால், தொடர்ந்து குப்பைகள் அதிகமாக சேர்ந்து சாக்கடை நிரம்பி வழிகிறது. மழைக்காலத்தில் இது பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், வாய்க்காலை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அப்பகுதி கவுன்சிலரும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான அகமது கபீர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

"பொதுமக்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ராஜவாய்க்காலில் குப்பைகளை கொட்டாமல், குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும்," என்று கவுன்சிலர் அகமது கபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மற்ற பிரதிநிதிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...