கோவையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்த கவுன்சிலர்

கோவை மாநகராட்சியின் 86வது வார்டில், கவுன்சிலர் அகமது கபீர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 86வது வார்டு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கவுன்சிலர் அகமது கபீர் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உக்கடம் குழந்தை கவுண்டர் வீதி பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால், தொடர்ந்து குப்பைகள் அதிகமாக சேர்ந்து சாக்கடை நிரம்பி வழிகிறது. மழைக்காலத்தில் இது பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், வாய்க்காலை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அப்பகுதி கவுன்சிலரும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான அகமது கபீர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

"பொதுமக்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ராஜவாய்க்காலில் குப்பைகளை கொட்டாமல், குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும்," என்று கவுன்சிலர் அகமது கபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மற்ற பிரதிநிதிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...