உடுமலை அருகே கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல்: விவசாயிகள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசன கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பகிர்மான கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் இந்த கால்வாய் கரையோரம் உள்ள பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மரங்களை வெட்டிய நபர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.



இந்த மரங்களை வெட்ட முறையான அனுமதி வழங்கப்பட்டதா அல்லது இது சட்டவிரோத செயலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரங்கள் வெட்டப்பட்டதால் கால்வாய் கரை பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...