உடுமலை அருகே கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல்: விவசாயிகள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசன கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பகிர்மான கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் இந்த கால்வாய் கரையோரம் உள்ள பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மரங்களை வெட்டிய நபர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.



இந்த மரங்களை வெட்ட முறையான அனுமதி வழங்கப்பட்டதா அல்லது இது சட்டவிரோத செயலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரங்கள் வெட்டப்பட்டதால் கால்வாய் கரை பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...