கோவை வடசித்தூர் அருகே சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை: நெகமம் போலீசார் விசாரணை

கோவை வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகன ஓட்டுநர் பிரபாகரன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். நெகமம் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். ஜூலை 5 அன்று, சரக்கு வண்டி வாடகைக்கு வேண்டும் என்று கூறி இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.


வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகனத்தில் செல்லும் போது, திடீரென அந்த இரண்டு நபர்கள் பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். சாலையில் நடுவில் நீண்ட நேரமாக சரக்கு வாகனம் நின்றதால், அவ்வழியே சென்றவர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை எட்டிப் பார்த்தனர்.


ஓட்டுநர் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...