உடுமலையில் 15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகாசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

உடுமலையில் யோக ஆசிரியர் குணசேகரன் 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு 360 மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் நடத்தி வரும் யோக ஆசிரியர் குணசேகரன், 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை முயற்சி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 15 நாட்கள், 360 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.



இந்த சாதனை குறித்து பேசிய யோக ஆசிரியர் குணசேகரன், "கண்பார்வை இல்லாதவர்களும் யோகாசனம் செய்து ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனங்கள் செய்தேன். ஏற்கனவே ஓடும் காரில் யோகாசனம், 4 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான யோகாசனம் போன்ற சாதனைகளை செய்துள்ளேன். அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தொடர்ந்து 15 நாட்கள் யோகாசனம் செய்தேன். இந்த சாதனையை பாரத தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன்," என்று கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய CEO சுமன் பாலே, லண்டன் CEO கே.ஸ்ரீகாந்த், சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...