கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக பாதிரியார் மீது விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

கோவை CSI இம்மானுவேல் சர்ச் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் வீடியோ காரணமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


Coimbatore: கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹிப) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஹிப அமைப்பினர் ஜூலை 4 ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை CSI இம்மானுவேல் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து சமய நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத துவேஷத்தை பரப்பும் இத்தகைய செயல்கள் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிந்தே பாதிரியார் இவ்வாறு பேசியுள்ளதாக விஹிப சந்தேகம் தெரிவித்துள்ளது. எனவே, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தனது புகார் மனுவில் கோரியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...