கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக பாதிரியார் மீது விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

கோவை CSI இம்மானுவேல் சர்ச் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் வீடியோ காரணமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


Coimbatore: கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹிப) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஹிப அமைப்பினர் ஜூலை 4 ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை CSI இம்மானுவேல் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து சமய நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத துவேஷத்தை பரப்பும் இத்தகைய செயல்கள் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிந்தே பாதிரியார் இவ்வாறு பேசியுள்ளதாக விஹிப சந்தேகம் தெரிவித்துள்ளது. எனவே, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தனது புகார் மனுவில் கோரியுள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...