கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக பாதிரியார் மீது விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

கோவை CSI இம்மானுவேல் சர்ச் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் வீடியோ காரணமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


Coimbatore: கோவையில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறப்படும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹிப) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஹிப அமைப்பினர் ஜூலை 4 ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை CSI இம்மானுவேல் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து சமய நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத துவேஷத்தை பரப்பும் இத்தகைய செயல்கள் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிந்தே பாதிரியார் இவ்வாறு பேசியுள்ளதாக விஹிப சந்தேகம் தெரிவித்துள்ளது. எனவே, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தனது புகார் மனுவில் கோரியுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...