பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் மூலம் தீவிர சோதனை

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாய் மூலம் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டனர். வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞான பாலமுருகன் தலைமையில், வனத்துறை துணை இயக்குனர் பார்கவ தேஜா உத்தரவின் பேரில் ஆழியார் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாயின் உதவியுடன் வாகனங்களை சோதனையிட்டனர்.

நேற்று மதியம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள், போதை ஊசிகள் போன்றவை உள்ளனவா என தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...