பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் மூலம் தீவிர சோதனை

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாய் மூலம் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டனர். வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞான பாலமுருகன் தலைமையில், வனத்துறை துணை இயக்குனர் பார்கவ தேஜா உத்தரவின் பேரில் ஆழியார் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாயின் உதவியுடன் வாகனங்களை சோதனையிட்டனர்.

நேற்று மதியம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள், போதை ஊசிகள் போன்றவை உள்ளனவா என தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...