உடுமலையில் நகர மன்ற கூட்டம்: குப்பை அகற்றும் பணி மற்றும் மதுபான கடை இடமாற்றம் குறித்து விவாதம்

உடுமலை நகர மன்ற கூட்டத்தில் குப்பை அகற்றும் பணி மற்றும் மதுபான கடை இடமாற்றம் குறித்து விவாதம் நடைபெற்றது. 75 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் பேசும் பொழுது, உடுமலை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் குப்பைகள் அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். அலட்சியம் காட்டும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், 25 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில், உடுமலை தளி ரோட்டில் மத்திய கூட்டுறவு வங்கி அர்பன் பேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும், இவற்றை இடமாற்றம் செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும், தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மீண்டும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், நகர மன்ற உறுப்பினர்கள் வழங்கும் கோரிக்கைகளை உடனே சரிசெய்ய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உட்பட சுமார் 75 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...