கோவை மத்திய மண்டலத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் - ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் வார்டு 48இல் சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 48க்குட்பட்ட அவினாசி சாலையில், ஜி.பி.சிக்னல் அருகே, 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (04.07.2024) மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஆணையாளருடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இத்திட்டம் நிறைவடைந்தால், வார்டு 48இல் உள்ள குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...