கோவை மத்திய மண்டலத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் - ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் வார்டு 48இல் சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 48க்குட்பட்ட அவினாசி சாலையில், ஜி.பி.சிக்னல் அருகே, 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (04.07.2024) மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஆணையாளருடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இத்திட்டம் நிறைவடைந்தால், வார்டு 48இல் உள்ள குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...