கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: சூலூர் பீடம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் 16 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 3) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக எஸ்ஐஎச்எஸ் காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மேம்பாலப் பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஒப்பந்ததாரர் மீது மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.



கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் நோக்கம், ஊரகப் பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதாகும். குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ.3.50 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் 16 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பீடம்பள்ளியில் ஒரு பயனாளியும், பட்டணத்தில் 3 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பீடம்பள்ளி ஊராட்சி, நடுப்பாளையம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முருகன், சரஸ்வதி, தங்கம்மாள் ஆகியோர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இடம் தேர்வு தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...