கோவையில் நில அளவைத் துறையின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி - 2 பேர் கைது

கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி செய்த இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட நகர நில அளவை பதிவேடு துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமார் (39). இவா், மாநகர சைபா் கிரைம் போலீஸில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதில், கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அனுமதியின்றி பயன்படுத்தி பட்டா மாறுதல் உள்ளிட்ட மோசடிகளில் சிலா் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் செளரிபாளையத்தைச் சோ்ந்த அருண் பிரதாப் (43), ஆட்சியா் அலுவலகத்தில் கணினிப் பிரிவில் தாற்காலிக ஊழியராகப் பணியாற்றும் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் (34) ஆகியோரை போலீஸார் நேற்று ஜூன்.27 கைது செய்தனா்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...