கோவையில் நில அளவைத் துறையின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி - 2 பேர் கைது

கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி செய்த இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட நகர நில அளவை பதிவேடு துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமார் (39). இவா், மாநகர சைபா் கிரைம் போலீஸில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதில், கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அனுமதியின்றி பயன்படுத்தி பட்டா மாறுதல் உள்ளிட்ட மோசடிகளில் சிலா் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் செளரிபாளையத்தைச் சோ்ந்த அருண் பிரதாப் (43), ஆட்சியா் அலுவலகத்தில் கணினிப் பிரிவில் தாற்காலிக ஊழியராகப் பணியாற்றும் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் (34) ஆகியோரை போலீஸார் நேற்று ஜூன்.27 கைது செய்தனா்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...