மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தின் பெயர் மாற்ற நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளதை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை அண்மையில் சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளனர். இந்த பெயர்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.



இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.25 ஈடுபட்டனர். அப்போது சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களை மாற்றி பாசிச வடிவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், பல்வேறு எதிர்ப்புகளை மீறியே இதனை ஒன்றிய அமல்படுத்துவதாகவும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உடனடியாக இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...