மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தின் பெயர் மாற்ற நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளதை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை அண்மையில் சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளனர். இந்த பெயர்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.



இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.25 ஈடுபட்டனர். அப்போது சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களை மாற்றி பாசிச வடிவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், பல்வேறு எதிர்ப்புகளை மீறியே இதனை ஒன்றிய அமல்படுத்துவதாகவும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உடனடியாக இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...