கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – மக்கள் மகிழ்ச்சி

ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு திறந்த வெளி சிறை சாலை உள்ள நிலத்தை, சர்வதேச கிரி்கெட் மைதானம் அமைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு நிலம் மாறுதல் செய்வதற்கான நகர்வு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கோவை ஒண்டிப்புதூரில் கிரி்கெட் மைதானம் அமைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகரில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வகையில் இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல்&டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், மத்திய சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டன.

மைதானம், வீரர்கள் காத்திருப்பு அறை, உடை மாற்றுவதற்கான அறை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க, 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விளையாட்டு துறை சார்பில் ஏற்கனவே தெரிவிககப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவையில் கடந்த ஜூன் 14ம் தேதி அன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வதேச கிரி்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை அறிவதற்காக, ஒண்டிப்புதூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்புடைய இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கினோம் எனவும், "தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்வதை உறுதி செய்வோம் எனவும் அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட நாளன்று பதிவிட்டு இருந்தார்.

இது கோவை மக்களிடம் கிரிக்கெட் மைதானம் அமையும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்பொழுது இடம் தேர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள 20.72 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்குதிறந்த வெளி சிறை சாலை உள்ள நிலத்தை, சர்வதேச கிரி்கெட் மைதானம் அமைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு நிலம் மாறுதல் செய்வதற்கான நகர்வுகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கிரி்கெட் மைதானம் அமைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...