தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்ற பாஜக தருண் விஜயை கண்டித்து கோவையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்று பேசிய பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜயை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? என சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் பாஜக எம்.பி.யான தருண் விஜயின் சர்சைக்குறிய இப்பேச்சைக் கண்டித்து இன்று திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தருண் விஜயின் கருத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெளிப்பாடு என்றும், இது இன எதிர்ப்பு விதமான பேச்சு என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், வட நாட்டு மக்களால் தென்னாட்டு மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

கோவை தேற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவட கழகத்தைச் சேர்ந்த 40-கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...