கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவிநாசி சாலையை பயன்படுத்த மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நீண்டுள்ள ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் அதிவேக வாகன ஓட்டம் தொடர்பான புகார்களை தொடர்ந்து, AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று மற்றும் நாளை இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




கோவை ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, முக்கிய மேம்பாலங்களை இரவு நேரங்களில் மூட போலீசார் முதலில் முடிவெடுத்தனர். ஆனால், முன்கூட்டியே மேம்பாலங்கள் பேரிகேடுகளால் அடைக்கப்பட்டதால் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதால், இந்த திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.




அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களை கண்காணித்து AI கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் திட்டம் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது மீண்டும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




இந்நிலையில், இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால், ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இரவு 10 மணி முதل் காலை 6 மணி வரை அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலுமாக தடை செய்யப்படுகின்றன.




எனவே, இரண்டு நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் வாகன ஓட்டிகள் ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தை பயன்படுத்தாமல், மாற்று வழியாக அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...