கோவையில் பல்வேறு வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: 7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன், பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்திட ரூ.112 கோடியே 52 இலட்சம் மதிப்பில் 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வடிகால்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், ஆழியார் அணையின் பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும், சமமட்டக்கால்வாயில் சர்க்கார்பதி மின் நிலையத்தின் அடிக்கால்வாய் மற்றும் சீராக்கி மதகினை புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...