கோவையில் பல்வேறு வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: 7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன், பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்திட ரூ.112 கோடியே 52 இலட்சம் மதிப்பில் 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வடிகால்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், ஆழியார் அணையின் பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும், சமமட்டக்கால்வாயில் சர்க்கார்பதி மின் நிலையத்தின் அடிக்கால்வாய் மற்றும் சீராக்கி மதகினை புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...