கோவையில் பல்வேறு வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: 7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன், பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்திட ரூ.112 கோடியே 52 இலட்சம் மதிப்பில் 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வடிகால்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், ஆழியார் அணையின் பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும், சமமட்டக்கால்வாயில் சர்க்கார்பதி மின் நிலையத்தின் அடிக்கால்வாய் மற்றும் சீராக்கி மதகினை புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...