உடுமலையில் தொடர்ந்து 15 நாட்கள் கண்களை கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து யோகா பயிற்சியாளர் அசத்தல்

தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகா பயிற்சியாளர் குணசேகரன் என்பவர் யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் எனும் பெயரில் யோகாசன பயிற்சிகளை அளித்து வருபவர் குணசேகரன், யோகாசனத்தில் கின்னஸ் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை செய்த இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலகிலேயே நீண்ட நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்களை செய்யும் உலக சாதனை முயற்சியை தொடங்கினார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வை உடுமலை டி.எஸ்.பி.சுகுமாறன், வித்யா நேத்திரா பள்ளி தாளாளர் தம்பு என்கிற நந்தகோபாலகிருஸ்னன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்கள் செய்யும் முயற்சியாக யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது இவர் செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



பார்வையற்றவர்களும் யோகாசனங்களை செய்து நோயில்லா ஆரோக்கிய வாழ்வை பெற்றிடவேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் யோகாசனங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அனைவரும் யோகாசனங்களின் பயன்களை அறிந்திடவேண்டும் என்பதற்காகவும், உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டதாக யோகா குரு குணசேகரன் கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய சி.இ ஒ.சுமன்பாலே லண்டன் சி.இ.ஒ கே.ஸ்ரீகாந்த் சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...