உடுமலையில் தொடர்ந்து 15 நாட்கள் கண்களை கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து யோகா பயிற்சியாளர் அசத்தல்

தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகா பயிற்சியாளர் குணசேகரன் என்பவர் யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் எனும் பெயரில் யோகாசன பயிற்சிகளை அளித்து வருபவர் குணசேகரன், யோகாசனத்தில் கின்னஸ் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை செய்த இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலகிலேயே நீண்ட நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்களை செய்யும் உலக சாதனை முயற்சியை தொடங்கினார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வை உடுமலை டி.எஸ்.பி.சுகுமாறன், வித்யா நேத்திரா பள்ளி தாளாளர் தம்பு என்கிற நந்தகோபாலகிருஸ்னன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்கள் செய்யும் முயற்சியாக யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது இவர் செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



பார்வையற்றவர்களும் யோகாசனங்களை செய்து நோயில்லா ஆரோக்கிய வாழ்வை பெற்றிடவேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் யோகாசனங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அனைவரும் யோகாசனங்களின் பயன்களை அறிந்திடவேண்டும் என்பதற்காகவும், உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டதாக யோகா குரு குணசேகரன் கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய சி.இ ஒ.சுமன்பாலே லண்டன் சி.இ.ஒ கே.ஸ்ரீகாந்த் சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...