கோவையில் சாலை ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை அழைப்பு

கோவையில், போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பாதசாரிகள் மற்றும் வாகனச் செல்பவர்களுக்கான சாலை இடையூறுகள் நீக்கப்படும் செயல்முறைகளை பற்றி பொதுமக்கள் தகவல் அளிக்க கோரிக்கை.



கோவை: கோவை மாநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் பாலகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பணிகளை கடந்து, மக்கள் மத்தியில் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இதனிடையே, சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகர காவல் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் கூறியதாவது: வாகனப்போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டத்திற்கு தடங்குதலாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநகர காவல்துறை.

கோவை மேற்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களிலும், கோவை கிழக்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், என மொத்தம் 31 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது கோவை மாநகரில் சாலை ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தகவல் ஏதேனும் இருந்தால் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண். 9498181213 அல்லது 8190000100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது 0422 - 2300970 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு அல்லது கோவை மாநகர காவல்துறையின் @policecbecity என்ற X வலைதள கணக்கிற்கோ அல்லது Coimbatore City Police என்ற பேஸ்புக் பக்கத்திலோ தகவல் அளிக்கலாம் என காவல்துறை இன்று ஜூன்.20 அறிவித்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...