கோவை கோவில்பாளையத்தில் கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த இரண்டு பேர் கைது

கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைப்பார்க்கும் ரவிக்குமார் என்பவரிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக ரவிக்குமார் என்பவா் பணியாற்றி வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் வந்த அழைப்பில் பேசிய நரேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் தாங்கள் கணபதியில் உள்ள ஒரு நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளனா்.

அப்போது, அவா்கள் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறியுள்ளனா். இதனை நம்பிய ரவிக்குமார் தனக்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு அவா்கள் கடன் தொகை பெற வேண்டுமெனில், ஆவணங்கள் தயார் செய்வதற்காக ரூ.1 லட்சத்து ரூ.20 ஆயிரம் கட்டணமாக கொடுக்க வேண்டும் எனவும், மொத்தம் ரூ.2 லட்சம் ஆகும் எனவும் கூறி உள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் கேட்ட தொகையை ரவிக்குமார் வழங்கினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவா்கள், கடன் தொகையை விரைவில் வழங்குவதாக கூறி சென்றனா். ஆனால், அதன் பிறகு அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை. மேலும், ரூ.20 லட்சம் கடனும் கொடுக்கவில்லை.

இதையடுத்து, மோசடி செய்யப்பட்டதை அறிந்த ரவிக்குமார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டவா்கள் வேலூா் மாவட்டம், ஆா்காடு வாத்தியார் கோவிந்தராஜ் வீதியைச் சோ்ந்த நரேஷ் (31), திருப்பூா் மாவட்டம் காங்கயம் தேவாங்காபுரத்தைச் சோ்ந்த யுவராஜ் (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காந்திபுரத்தில் பதுங்கி இருந்த அவா்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் நேற்றுஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...