கோவை கோவில்பாளையத்தில் கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த இரண்டு பேர் கைது

கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைப்பார்க்கும் ரவிக்குமார் என்பவரிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக ரவிக்குமார் என்பவா் பணியாற்றி வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் வந்த அழைப்பில் பேசிய நரேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் தாங்கள் கணபதியில் உள்ள ஒரு நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளனா்.

அப்போது, அவா்கள் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறியுள்ளனா். இதனை நம்பிய ரவிக்குமார் தனக்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு அவா்கள் கடன் தொகை பெற வேண்டுமெனில், ஆவணங்கள் தயார் செய்வதற்காக ரூ.1 லட்சத்து ரூ.20 ஆயிரம் கட்டணமாக கொடுக்க வேண்டும் எனவும், மொத்தம் ரூ.2 லட்சம் ஆகும் எனவும் கூறி உள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் கேட்ட தொகையை ரவிக்குமார் வழங்கினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவா்கள், கடன் தொகையை விரைவில் வழங்குவதாக கூறி சென்றனா். ஆனால், அதன் பிறகு அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை. மேலும், ரூ.20 லட்சம் கடனும் கொடுக்கவில்லை.

இதையடுத்து, மோசடி செய்யப்பட்டதை அறிந்த ரவிக்குமார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டவா்கள் வேலூா் மாவட்டம், ஆா்காடு வாத்தியார் கோவிந்தராஜ் வீதியைச் சோ்ந்த நரேஷ் (31), திருப்பூா் மாவட்டம் காங்கயம் தேவாங்காபுரத்தைச் சோ்ந்த யுவராஜ் (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காந்திபுரத்தில் பதுங்கி இருந்த அவா்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் நேற்றுஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...