வருகின்ற 24ம் தேதி பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் - உடுமலையில் காங்கிரஸ் கமிட்டி செய்தி மாநில தொடர்பாளர் பேட்டி

தற்போது அமைந்துள்ள பாஜக அரசு தனி பெரும்பான்மை இல்லாமல் இருப்பதற்கு முழு காரணம் ராகுல் காந்தி தான். வருகின்ற 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தலின் போது பாஜக ஆட்சி உறுதியாக கவிழும் என காங்கிரஸ் கமிட்டி செய்தி மாநில தொடர்பாளர் இப்ராஹீம் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் முதியோர் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாநில செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான இப்ராஹிம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் இப்ராஹீம் பேசும் போது,



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்கும் வகையில் தற்பொழுது ராகுல் காந்தி செயல்பட்டு வருகின்றார். தற்போது அமைந்துள்ள பாஜக அரசு தனி பெரும்பான்மை இல்லாமல் இருப்பதற்கு முழு காரணம் ராகுல் காந்தி தான். வருகின்ற 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தலின் போது பாஜக ஆட்சி உறுதியாக நிறைவடையும்.

தற்சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் பாஜகவை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு விழுந்த வாக்குகள் மற்றும் அயோத்தியில் டெபாசிட் இழப்பு என கூறலாம். இனியும் மதத்தை வைத்து அரசியல் செய்ய பாஜகவால் முடியாது. தமிழகத்தில் இரட்டை சகோதரர்களாக உள்ள மு.க. ஸ்டாலின் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி 40க்கு 40. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெறும்.

காங்கிரஸ் கட்சி 130 ஆண்டுகளாக இந்தியா மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. மக்கள் விரேத சட்டங்களை எதிர்த்து வரும் ஒரே இயக்கம் காங்கிரஸ் இயக்கம். ஆனால் பாஜக அரசு மாநில கட்சிகளை பிரித்தாலும் சூழ்ச்சிகளை பல இடங்களில் செய்துள்ளது. தற்போது நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு தயவால் ஆட்சி அமைத்துள்ளது. இது என்றும் நிலைக்காது. நிதீஷ் குமார் ஆக்னி பாத்திட்டம், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர சிறப்பு அந்தஸ்து திட்டத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே தற்போது மைனாரிட்டி பாஜக அரசாகவே இருக்கும் நிலையில் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட கவுன்சிலர் ஜனதார்தனன், நகர தலைவர் கோ.ரவி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஜோஸ்வா, வட்டார தலைவர் வெங்கடேஷ், விவசாய அணி தலைவர் சிவக்கொழுந்து, உடுமலை நகராட்சி 4-வது வார்டு காங்கிரஸ் கட்சி நகரமன்ற உறுப்பினர் கலைவாணி சதிஸ்குமார், மாவட்ட செயலாளர் எஸ். முருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், திருச்சி முத்து, மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...