வருகின்ற 24ம் தேதி பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் - உடுமலையில் காங்கிரஸ் கமிட்டி செய்தி மாநில தொடர்பாளர் பேட்டி

தற்போது அமைந்துள்ள பாஜக அரசு தனி பெரும்பான்மை இல்லாமல் இருப்பதற்கு முழு காரணம் ராகுல் காந்தி தான். வருகின்ற 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தலின் போது பாஜக ஆட்சி உறுதியாக கவிழும் என காங்கிரஸ் கமிட்டி செய்தி மாநில தொடர்பாளர் இப்ராஹீம் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் முதியோர் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாநில செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான இப்ராஹிம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் இப்ராஹீம் பேசும் போது,



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்கும் வகையில் தற்பொழுது ராகுல் காந்தி செயல்பட்டு வருகின்றார். தற்போது அமைந்துள்ள பாஜக அரசு தனி பெரும்பான்மை இல்லாமல் இருப்பதற்கு முழு காரணம் ராகுல் காந்தி தான். வருகின்ற 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தலின் போது பாஜக ஆட்சி உறுதியாக நிறைவடையும்.

தற்சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் பாஜகவை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு விழுந்த வாக்குகள் மற்றும் அயோத்தியில் டெபாசிட் இழப்பு என கூறலாம். இனியும் மதத்தை வைத்து அரசியல் செய்ய பாஜகவால் முடியாது. தமிழகத்தில் இரட்டை சகோதரர்களாக உள்ள மு.க. ஸ்டாலின் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி 40க்கு 40. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெறும்.

காங்கிரஸ் கட்சி 130 ஆண்டுகளாக இந்தியா மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. மக்கள் விரேத சட்டங்களை எதிர்த்து வரும் ஒரே இயக்கம் காங்கிரஸ் இயக்கம். ஆனால் பாஜக அரசு மாநில கட்சிகளை பிரித்தாலும் சூழ்ச்சிகளை பல இடங்களில் செய்துள்ளது. தற்போது நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு தயவால் ஆட்சி அமைத்துள்ளது. இது என்றும் நிலைக்காது. நிதீஷ் குமார் ஆக்னி பாத்திட்டம், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர சிறப்பு அந்தஸ்து திட்டத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே தற்போது மைனாரிட்டி பாஜக அரசாகவே இருக்கும் நிலையில் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட கவுன்சிலர் ஜனதார்தனன், நகர தலைவர் கோ.ரவி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஜோஸ்வா, வட்டார தலைவர் வெங்கடேஷ், விவசாய அணி தலைவர் சிவக்கொழுந்து, உடுமலை நகராட்சி 4-வது வார்டு காங்கிரஸ் கட்சி நகரமன்ற உறுப்பினர் கலைவாணி சதிஸ்குமார், மாவட்ட செயலாளர் எஸ். முருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், திருச்சி முத்து, மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...