கோவை சுங்கம் அகஸ்டியன் பேட்டையில் சர்ச் அமைக்க எதிர்ப்பு – ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு

அரசு இடத்தில் திடீர் சர்ச் உருவாவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மதரீதியான பிளவுகள், மக்களிடையே உண்டாகாமல் பாதுகாக்க வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு ஒன்று இன்று ஜூன்.19 அளிக்கப்பட்டது. அதில் கோவை உட்பட, தமிழகம் முழுவதும் பொது இடம், நீர் நிலைகள், போக்குவரத்துக்கு இடையூறு என்று சொல்லி, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல இந்து கோவில்களை மாநகராட்சியினராலும், தமிழக அரசினாலும், ஹிந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இடிக்கப்பட்டன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களின் ஆலயங்கள் புதிதாக பொது இடங்களில் கட்டப்படுவதை அரசும் மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசு ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதைப் போல உள்ளது.



கோயம்புத்தூர், சுங்கம், சிந்தாமணிக்கு பின்புறமுள்ள அகஸ்தியன் பேட்டை என்ற இடத்தில், சில நாட்களுக்கு முன்பு, "அகஸ்டியன் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கெபி" என்ற ஒரு சர்ச் திடீரென அமைத்து, இன்று ஜூன்.19 அவசர அவசரமாக சுற்றுச்சுவர் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதை அரசும், மாநகராட்சியும் கண்டு கொள்ளாமல் இருப்பதை, விஸ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, உடனடியாக அரசு இடத்தில், இந்த திடீர் சர்ச் உருவாவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டு, இந்தப் பகுதியில், எதிர்காலத்தில் மதரீதியான பிளவுகள், மக்களிடையே உண்டாகாமல் பாதுகாக்க வேண்டுமென்று கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...