கோவை சுங்கம் அகஸ்டியன் பேட்டையில் சர்ச் அமைக்க எதிர்ப்பு – ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு

அரசு இடத்தில் திடீர் சர்ச் உருவாவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மதரீதியான பிளவுகள், மக்களிடையே உண்டாகாமல் பாதுகாக்க வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு ஒன்று இன்று ஜூன்.19 அளிக்கப்பட்டது. அதில் கோவை உட்பட, தமிழகம் முழுவதும் பொது இடம், நீர் நிலைகள், போக்குவரத்துக்கு இடையூறு என்று சொல்லி, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல இந்து கோவில்களை மாநகராட்சியினராலும், தமிழக அரசினாலும், ஹிந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இடிக்கப்பட்டன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களின் ஆலயங்கள் புதிதாக பொது இடங்களில் கட்டப்படுவதை அரசும் மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசு ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதைப் போல உள்ளது.



கோயம்புத்தூர், சுங்கம், சிந்தாமணிக்கு பின்புறமுள்ள அகஸ்தியன் பேட்டை என்ற இடத்தில், சில நாட்களுக்கு முன்பு, "அகஸ்டியன் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கெபி" என்ற ஒரு சர்ச் திடீரென அமைத்து, இன்று ஜூன்.19 அவசர அவசரமாக சுற்றுச்சுவர் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதை அரசும், மாநகராட்சியும் கண்டு கொள்ளாமல் இருப்பதை, விஸ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, உடனடியாக அரசு இடத்தில், இந்த திடீர் சர்ச் உருவாவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டு, இந்தப் பகுதியில், எதிர்காலத்தில் மதரீதியான பிளவுகள், மக்களிடையே உண்டாகாமல் பாதுகாக்க வேண்டுமென்று கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...