தாராபுரத்தில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் 127வது அரங்கேற்றம் விழா - கும்மியாட்டம் ஆடி கலைஞர்கள் அசத்தல்

முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் மற்றும் தத்துவ பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள், பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் அரங்கேற்ற விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழு சார்பில் 127-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில், இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழுவின் ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான பவளக்கொடி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடை அணிந்து ஆடினர். இதில் சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.



முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...