தாராபுரத்தில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் 127வது அரங்கேற்றம் விழா - கும்மியாட்டம் ஆடி கலைஞர்கள் அசத்தல்

முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் மற்றும் தத்துவ பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள், பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் அரங்கேற்ற விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழு சார்பில் 127-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில், இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழுவின் ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான பவளக்கொடி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடை அணிந்து ஆடினர். இதில் சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.



முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...