பாஜக தலைவர்கள் பற்றி எக்ஸ் தளத்தில் தவறான பதிவு - கோவை காவல் நிலையத்தில் பாஜக மகளிர் அணி புகார்

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி எக்ஸ் வலைதளத்தில் அருவருக்கதக்க வகையில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பாஜக மகளிர் அணியினர் புகார் அளித்தனர்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி எக்ஸ் வலைதளத்தில் கேவலமான பதிவிட்ட திமுக ஐடி விங்கை சார்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், தொடர்ச்சியாக இப்படி பதிவிட்டு வரும் திமுக IT wing நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோவை மாநகர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கோவை இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய சிறப்பு பிரிவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து உள்ளது.

ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்த நிலையில், தற்பொழுது அரசியல் கட்சித் தலைவர்களை ஆபாசமாகவும், அருவருக்கத் தக்க வகையிலும் பதிவு செய்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகரம் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயஸ்ரீ வழக்கம் போல் அவர், சமூக வலைத் தளத்தில் உள் நுழைந்து பல்வேறு கருத்துக்களை பார்த்து வந்த போது "ethisundar" https://x.com/ethisundar/status/1802249809316774264” என்ற கணக்கில் பாஜக MLA வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியை பகிர்ந்து அதன் மேல் "வயாகரா நல்ல எழுச்சியை கொடுக்குமோ?" என்று அருவருக்க தக்க வார்த்தைகளில் அந்த நபர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.



மேலும் அந்த நபரின் கணக்கில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரது தோற்றத்தை மறைத்து உள்ளார். எனவே சமூக வலைத் தளத்தில் பெண்ணியத்தை அவதூறாக பகிர்ந்து உள்ள மேற்படி நபரை யார்? என்று கண்டு அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வண்ணத்தில் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பாஜக மகளிர் அணியினர் புகார் அளித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...