கோவையில் புதிய அங்கன்வாடி மையங்களின் பூமி பூஜையை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

கோவையில் MLA வானதி சீனிவாசன் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்தினார். வார்டுகள் எண் 48, 67, 69 மற்றும் சித்தாப்புதூர் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 48வது வார்டு, போலீஸ் குவாட்டர்ஸ், சித்தாபுதூர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது.



இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார். 



இதேபோல மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 67வது வார்டில் உள்ள வி.கே.கே மேனன் சாலை, சித்தாப்புதூர் சுற்றியுள்ள பகுதி குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார்.



இதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் வார்டு எண் 67, அண்ணபூர்ணா லே அவுட், சித்தாப்புதூர் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்றுதொடங்கி வைத்தார். 



இதேபோல பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவை குறைவில்லாமல் கிடைத்திட வழிவகை செய்யும் வார்டு எண் 69, காமராஜபுரம் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதியஅங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...