கோவையில் புதிய அங்கன்வாடி மையங்களின் பூமி பூஜையை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

கோவையில் MLA வானதி சீனிவாசன் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்தினார். வார்டுகள் எண் 48, 67, 69 மற்றும் சித்தாப்புதூர் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 48வது வார்டு, போலீஸ் குவாட்டர்ஸ், சித்தாபுதூர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது.



இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார். 



இதேபோல மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 67வது வார்டில் உள்ள வி.கே.கே மேனன் சாலை, சித்தாப்புதூர் சுற்றியுள்ள பகுதி குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார்.



இதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் வார்டு எண் 67, அண்ணபூர்ணா லே அவுட், சித்தாப்புதூர் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்றுதொடங்கி வைத்தார். 



இதேபோல பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவை குறைவில்லாமல் கிடைத்திட வழிவகை செய்யும் வார்டு எண் 69, காமராஜபுரம் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதியஅங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...