கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகை - காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி

கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகையால் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மூச்சுதிணறி அவதிப்பட்டனர். காவல்நிலையம் அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தை மாற்ற கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சிகுட்பட்ட இடத்தில் கணியூர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகிலேயே ஜோத்தம்பட்டி ஊராட்சியின் குப்பைகொட்டும் இடமும் உள்ளது. இதில் அவ்வப்போது தீபற்றி கொள்வது வழக்கும்.



இந்நிலையில் திடீரென நேற்று மதியவேலையில் தீபற்றி கரும்புகை எழுந்து காவல்நிலையத்தை சூழ்ந்தது இதனால் காவலர்கள் புகையை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அருகிலுள்ள காரத்தொழுவு மடத்துக்குளம் சாலையிலும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஒட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தினறினர்.

காவல்நிலையம் அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் அல்லது தீபற்றி கரும்புகை எழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கபடுகிறது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...