ஈஷா மின் தகன மேடை விவகாரம் - முட்டத்துவயல் கிராமத்தில் தபெதிக மற்றும் ஈஷா ஆதரவாளர்கள் மோதல்

முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை அமைத்துள்ள மின் தகன மேடையால் பாதிப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்ய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு சென்றனர். அப்போது, தபெதிக-வினருக்கும், ஈஷா யோகா மைய ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், ஆலாந்துறை இக்கரை போளுவாம்பட்டி அருகே உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



இந்நிலையில், மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா? எனவும், பழங்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து கண்டறிய தந்தை பெரியார் திராவிடர் கழகம், வெள்ளியங்கிரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இணைந்து உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்தனர்.

மேலும், இக்குழுவினர் நேற்று ஜூன்.14 வேன் மூலம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில் அருகே சென்ற போது, அங்கிருந்த ஈஷா யோகா மைய ஊழியர்கள், ஈஷா ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்மைக் கண்டறியும் குழுவினரை உள்ளே செல்ல அனுமதிக்காமல், சாலையின் குறுக்கே மாட்டு வண்டியை வைத்து தடுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இது ஒரு கட்டத்தில் மோதலாக மாறிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆலாந்துறை போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஈஷா ஆதரவாளர்கள் உண்மைக் கண்டறியும் குழுவினர் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, இரு தரப்பினரும் ஆலாந்துறை காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...