ஈஷா மின் தகன மேடை விவகாரம் - முட்டத்துவயல் கிராமத்தில் தபெதிக மற்றும் ஈஷா ஆதரவாளர்கள் மோதல்

முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை அமைத்துள்ள மின் தகன மேடையால் பாதிப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்ய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு சென்றனர். அப்போது, தபெதிக-வினருக்கும், ஈஷா யோகா மைய ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், ஆலாந்துறை இக்கரை போளுவாம்பட்டி அருகே உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



இந்நிலையில், மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா? எனவும், பழங்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து கண்டறிய தந்தை பெரியார் திராவிடர் கழகம், வெள்ளியங்கிரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இணைந்து உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்தனர்.

மேலும், இக்குழுவினர் நேற்று ஜூன்.14 வேன் மூலம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில் அருகே சென்ற போது, அங்கிருந்த ஈஷா யோகா மைய ஊழியர்கள், ஈஷா ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்மைக் கண்டறியும் குழுவினரை உள்ளே செல்ல அனுமதிக்காமல், சாலையின் குறுக்கே மாட்டு வண்டியை வைத்து தடுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இது ஒரு கட்டத்தில் மோதலாக மாறிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆலாந்துறை போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஈஷா ஆதரவாளர்கள் உண்மைக் கண்டறியும் குழுவினர் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, இரு தரப்பினரும் ஆலாந்துறை காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...