காங்கேயத்தில் பிஏபி வாய்க்காலில் பாலத்தை இணைக்க முடியாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் திண்டாட்டம்

பிஏபி வாய்க்காலில் பழைய குழாய்களை புதிய பாலத்துடன் நேருக்கு நேர் இணைத்து தண்ணீர் முழுமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டும். பிஏபி வாய்க்காலில் இணைக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: காங்கேயம்-வெள்ளகோயில் தேசிய நெடுஞ்சாலையில் பிஏபி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்த குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் கட்டப்படுவதாக விவசாயிகள் நினைத்திருந்த வேளையில் பாலம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் வாய்க்காலில் பாலத்தை இணைக்க முடியாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் பிஏபி வாய்க்கால் நிர்வாகத்திடம், விவசாயிகள் போராடிவரும் நிலையில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் பாலம் கட்டி கொடுப்பார்கள் என்று நினைத்திருந்த வேளையில் அவர்களும் பழிவாங்குவதாக விவசாயிகள் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர். முறைப்படி பாலத்தை வாய்க்காலில் இணைக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



காங்கேயம் வெள்ளகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பரப்பிக்குளம் ஆழியாறு பாசன (பிஏபி) வாய்க்காலை அடைத்து தண்ணீர் தடுக்கும் வகையில் புதிய பாலம் கட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பிஏபி வெள்ளகோவில் நீர் பாசன சங்க நிர்வாகிகள் கூறியதாவது, பல்லடம் முதல் கரூர் வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வெள்ளகோவில் வழியில் வீரணம் பாளையம் அருகில் பிஏபி வாய்க்கால் பாசனம் நீர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் செல்ல ஏற்கனவே குழாய் பாலம் உள்ளது.

தற்போது சாலை விரிவாக்கின் போது புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலம் சிமெண்ட் குழாய்கள் இல்லாமல் அப்படியே தண்ணீர் செல்லும் வகையில் கட்டப்படுகிறது. புதிய பாலம் பழைய பாலத்தின் குழாய்களுடன் இணையும் இடத்தில் பாதி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தடுக்கப்பட்டு மறுபுறம் செல்ல முடியாது. வாய்க்காலில் பழைய குழாய்களை புதிய பாலத்துடன் நேருக்கு நேர் இணைத்து தண்ணீர் முழுமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டும். தற்போது கட்டிய பாலத்தை அகற்றி விட்டு முற்றிலும் புதிய பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அப்படி இடித்துவிட்டு இப்பணியை செய்யவில்லை என்றால் விவசாயிகள் ஒன்று இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...