வால்பாறையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் முகாமில் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று ஜூன்.13 நடைபெற்றது. வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பொள்ளாச்சி சார் ஆட்சியா் கேத்தரின் சரண்யா தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

மொத்தம் 70 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் சந்திரமோகன், வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...