ரேஷன் கடைகளில் தொடரும் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு - தரம் சரியில்லாததால் திருப்பி அனுப்பியதாக கோவை ஆட்சியர் விளக்கம்

டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று கோவை ஆட்சியர் பதிலளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது மாதமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,536 நியாய விலைக் கடைகள் உள்ளன. மாதந்தோறும் 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மே மாதம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவியது.

தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் டெண்டர் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. மே மாதத்துக்கான பருப்பு, பாமாயில் பொருட்களை இம்மாதம் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதே போல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மே மாதத்துக்கான பொருட்களை ஊழியர்கள் வழங்கினர். இருப்பினும் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு தொடர்வதால் கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகுப்பு பலருக்கு வழங்கப்பட வில்லை.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான ஒதுக்கீடும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை நுகர்வோர் அமைப்பினர் கூறும் போது, "பொதுவாக கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முதல் வாரமும், மூன்றாவது வாரமும் பொருட்கள் குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்படும். பெரும்பாலான ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் சரிவர கோவை மாவட்ட ஆட்சியர் விநியோகிக்கப்படுவதில்லை.

கண்காணிப்பு குழு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை. மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் சரிவர நடப்பதில்லை. மாதந்தோறும் குறித்த நேரத்தில் அனைத்து பொருட்களும் சிறந்த தரத்துடன் திருப்பி விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும் போது, டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று தெரிவித்தார்.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....