கோவையில் TNPSC குரூப் 4 தேர்வில் 69,737 பேர் பங்கேற்பு

கோவையில் TNPSC குரூப் 4 தேர்வை 69,737 பேர் எழுதுகின்றனர். காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை நடைபெறும் இந்த தேர்விற்கு, 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனி செயலாளர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், ஆய்வக உதவியாளர் உட்பட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.



அதற்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் நடைபெறும் குரூப் 4 தேர்வை 69 ஆயிரத்து 737 பேர் எழுதுகின்றனர். இதற்காக 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.



இந்த நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் செளரிபாளையம் பகுதியை சேர்ந்த கரோலினா என்ற பெண் அவரது ஆறு மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வருகை புரிந்தார். தேர்வு துவங்கும் வரை குழந்தையை பார்த்துக்கொண்ட அவர் தேர்வு துவங்கியதும் குழந்தையை அவரது கணவரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.



அதேசமயம் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வருகைபுரிய 9 மணி வரை அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களிடம் இவ்வாறு தாமதமாக வரக்கூடாது என்று கூறி அலுவலர்கள் அனுமதித்தனர். சிலர் மிகவும் தாமதமாக வந்த நிலையில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...