மருதமலையில் இருந்து முதுமலை காப்பகத்திற்கு அனுப்பப்பட்ட குட்டி யானை

மருதமலையில் அதன் தாயுடன் சேர முடியாத குட்டி யானையை வனத்துறையினர் இன்று காலை முதுமலை யானைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை மருதமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் காட்டு யானை சிகிச்சைக்கு பிறகு காடு திரும்பியது.

இந்நிலையில் தாயுடன் இருந்த குட்டி யானை பிரிந்த நிலையில் தாயுடன் சேர்க்க நான்கு நாட்கள் முயற்சி செய்யப்பட்டது. முயற்சி கைகொடுக்காத நிலையில் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு குட்டி யானை இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை வழங்கப்பட்ட தாய் யானை ஆரோக்கியமாக உள்ள நிலையில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தபோது குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து மற்ற கூட்டத்துடன் இருந்தது. இந்நிலையில் நான்கு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு தாய் யானை காட்டிற்குள் சென்றது.

இதனை அடுத்து மற்றொரு கூட்டத்துடன் இருந்த குட்டி யானையை பிரித்து வனத்துறையினர் தாயானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுவாக வனத்துறையினர் தாய் மற்றும் குட்டி யானையை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இந்த முயற்சி பலனை பலனளிக்காத நிலையில் இன்று காலை முதுமலை யானைகள் முகாமிற்கு நான்கு மாதமே ஆன குட்டி யானை மருதமலை பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே முதுமலை யானைகள் முகாமில் இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மூன்றாவது குட்டி யானையாக செய்துள்ளது மருதமலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த குட்டி யானை.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...