கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவல் குல்வுந்தர் கவுருக்கு தபெதிக சார்பில் தங்க மோதிரம் பரிசளிப்பு

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலர் "குல்விந்தர் கவுரை பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைப்பதாக கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.


கோவை: பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத், சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப்., காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். தன் தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று கூறியிருக்கிறார்.



விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார் என குறிப்பிட்ட தபெதிக, விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனை ஆக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை "குல்விந்தர் கௌரை, பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைக்கிறோம் என அந்த அமைப்பின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...