கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவல் குல்வுந்தர் கவுருக்கு தபெதிக சார்பில் தங்க மோதிரம் பரிசளிப்பு

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலர் "குல்விந்தர் கவுரை பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைப்பதாக கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.


கோவை: பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத், சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப்., காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். தன் தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று கூறியிருக்கிறார்.



விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார் என குறிப்பிட்ட தபெதிக, விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனை ஆக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை "குல்விந்தர் கௌரை, பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைக்கிறோம் என அந்த அமைப்பின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...