கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

இரண்டாவது நாள் ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், சென்னை இந்தியன் வங்கி அணி 82-73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் 57- ஆவது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான 21-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஜூன்.5ம் தேதி தொடங்கின. தொடர்ந்து ஜூன்.6 நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியை எதிர்த்து பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணி மோதியது. இதில், பாங்க் ஆஃப் பரோடா அணி 80 - 70 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், இந்தியன் வங்கி அணி 82 - 73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்சார வாரிய அணி 96 - 67 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.



இதேபோல, மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில், தென் மத்திய ரயில்வே அணி 107 - 57 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி மோதியதில், தெற்கு ரயில்வே அணி 80 - 71 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியை எதிர்த்து மும்பை மத்திய ரயில்வே அணி மோதியது. இதில், மத்திய ரயில்வே அணி 78-62 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...