கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

இரண்டாவது நாள் ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், சென்னை இந்தியன் வங்கி அணி 82-73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் 57- ஆவது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான 21-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஜூன்.5ம் தேதி தொடங்கின. தொடர்ந்து ஜூன்.6 நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியை எதிர்த்து பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணி மோதியது. இதில், பாங்க் ஆஃப் பரோடா அணி 80 - 70 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், இந்தியன் வங்கி அணி 82 - 73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்சார வாரிய அணி 96 - 67 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.



இதேபோல, மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில், தென் மத்திய ரயில்வே அணி 107 - 57 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி மோதியதில், தெற்கு ரயில்வே அணி 80 - 71 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியை எதிர்த்து மும்பை மத்திய ரயில்வே அணி மோதியது. இதில், மத்திய ரயில்வே அணி 78-62 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...