கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

இரண்டாவது நாள் ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், சென்னை இந்தியன் வங்கி அணி 82-73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் 57- ஆவது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான 21-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஜூன்.5ம் தேதி தொடங்கின. தொடர்ந்து ஜூன்.6 நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியை எதிர்த்து பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணி மோதியது. இதில், பாங்க் ஆஃப் பரோடா அணி 80 - 70 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், இந்தியன் வங்கி அணி 82 - 73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்சார வாரிய அணி 96 - 67 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.



இதேபோல, மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில், தென் மத்திய ரயில்வே அணி 107 - 57 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி மோதியதில், தெற்கு ரயில்வே அணி 80 - 71 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியை எதிர்த்து மும்பை மத்திய ரயில்வே அணி மோதியது. இதில், மத்திய ரயில்வே அணி 78-62 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...