எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி இடையே உட்கட்சி பூசல் - கோவையில் அண்ணாமலை பேட்டி

எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டனர். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.


கோவை: டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போத அவர் பேசியாதவது, 2019அம் ஆண்டு அதிமுக ஆளும் கட்சி. பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணிக்கு அவர் பதிலளித்துள்ளார். எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது.

பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு. இல்லை என்றால் ஒரு பேச்சு. அதிமுக கோவையில் அனைத்து எம்.எல்.ஏ இருந்தும் ஏன் வெற்றி பெற வில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்.

பாஜகவிற்கு காலம் வரும். தொண்டர்கள் உணர்ச்சி வசபட வேண்டாம். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம். வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.

கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம். படிப்படியாக தான் வெற்றியை பார்க்க முடியும். அதிகளவில் எஸ்.பி வேலுமணி தவறான புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார்.

இணை அமைச்சர் பதவி ஏற்பதாக கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. கோவை மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து உள்ளனர். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் படைத்துள்ளது.

எஸ்.வி.சேகர் யார் என்று எனக்கு தெரியாது. எங்களின் செயல்பாடு தான் 2 இலக்குகளில் வாக்கு வாங்கியுள்ளோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை என்பதும் புதியவர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுப்பது அதிகம். 2026 கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலே தெரியும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...