தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 19 தொகுதிகளில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக 10 தொகுதிகளிலும், பாமக 6 தொகுதிகளிலும், தாமக 3 தொகுதிகளிலும், அமமுக ஒரு தொகுதியிலும், இஜக ஒரு தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இந்நிலையில், டெபாசிட் இழந்த வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வட சென்னையில் பால் கனகராஜ், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, கரூரில் செந்தில்நாதன், நாகப்பட்டினத்தில் ரமேஷ், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், திருவள்ளூரில் பொன் பாலகணபதி, திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இதேபோல், பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. திண்டுக்கலில் போட்டியிட்ட திலகபாமா, கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட தேவதாஸ், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட ஜோதி, மயிலாடுதுறையில் போட்டியிட்ட ஸ்டாலின், சேலத்தில் போட்டியிட்ட அண்ணாதுரை, விழுப்புரத்தில் போட்டியிட்ட முரளிசங்கர் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தமாக 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. ஈரோட்டில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூரில் வேணுகோபால், தூத்துக்குடியில் விஜயசீலன் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக 1 தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. திருச்சியில் செந்தில்நாதன் டெபாசிட் இழந்துள்ளார். பாஜக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்ட இஜக டெபாசிட் இழந்தது. பெரம்பலூரில் போட்டியிட்ட பாரிவேந்தர் டெபாசிட் இழந்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட “பாஜக கூட்டணி - NDA” மொத்தமாக 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...