தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 19 தொகுதிகளில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக 10 தொகுதிகளிலும், பாமக 6 தொகுதிகளிலும், தாமக 3 தொகுதிகளிலும், அமமுக ஒரு தொகுதியிலும், இஜக ஒரு தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இந்நிலையில், டெபாசிட் இழந்த வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வட சென்னையில் பால் கனகராஜ், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, கரூரில் செந்தில்நாதன், நாகப்பட்டினத்தில் ரமேஷ், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், திருவள்ளூரில் பொன் பாலகணபதி, திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இதேபோல், பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. திண்டுக்கலில் போட்டியிட்ட திலகபாமா, கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட தேவதாஸ், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட ஜோதி, மயிலாடுதுறையில் போட்டியிட்ட ஸ்டாலின், சேலத்தில் போட்டியிட்ட அண்ணாதுரை, விழுப்புரத்தில் போட்டியிட்ட முரளிசங்கர் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தமாக 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. ஈரோட்டில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூரில் வேணுகோபால், தூத்துக்குடியில் விஜயசீலன் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக 1 தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. திருச்சியில் செந்தில்நாதன் டெபாசிட் இழந்துள்ளார். பாஜக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்ட இஜக டெபாசிட் இழந்தது. பெரம்பலூரில் போட்டியிட்ட பாரிவேந்தர் டெபாசிட் இழந்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட “பாஜக கூட்டணி - NDA” மொத்தமாக 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...