தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 19 தொகுதிகளில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக 10 தொகுதிகளிலும், பாமக 6 தொகுதிகளிலும், தாமக 3 தொகுதிகளிலும், அமமுக ஒரு தொகுதியிலும், இஜக ஒரு தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இந்நிலையில், டெபாசிட் இழந்த வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வட சென்னையில் பால் கனகராஜ், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, கரூரில் செந்தில்நாதன், நாகப்பட்டினத்தில் ரமேஷ், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், திருவள்ளூரில் பொன் பாலகணபதி, திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இதேபோல், பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. திண்டுக்கலில் போட்டியிட்ட திலகபாமா, கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட தேவதாஸ், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட ஜோதி, மயிலாடுதுறையில் போட்டியிட்ட ஸ்டாலின், சேலத்தில் போட்டியிட்ட அண்ணாதுரை, விழுப்புரத்தில் போட்டியிட்ட முரளிசங்கர் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தமாக 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. ஈரோட்டில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூரில் வேணுகோபால், தூத்துக்குடியில் விஜயசீலன் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக 1 தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. திருச்சியில் செந்தில்நாதன் டெபாசிட் இழந்துள்ளார். பாஜக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்ட இஜக டெபாசிட் இழந்தது. பெரம்பலூரில் போட்டியிட்ட பாரிவேந்தர் டெபாசிட் இழந்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட “பாஜக கூட்டணி - NDA” மொத்தமாக 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...