கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்


தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதியன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறவுள்ளது. 

இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனை, இருதய சிறப்பு பரிசோதனை, இரத்த பரிசோதனை, கல்லீரல் மற்றும் குடலியல் பரிசோதனை, மூட்டுவலி மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, சர்க்கரை அளவு கண்டறிதல், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

மேலும் பரிசோதனைகளில் தீவிர நோய் தொற்று கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது.  

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகாவில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற வேண்டுபென கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...